Wednesday, January 19, 2011

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு

தேவையான பொருட்கள்



துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
மிளகு - 1 தேக்கரண்டி
கருவேப்பிலை (உதிர்த்தது) - 1/2 கப்
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிது
எண்ணைய் - பொரிக்க
கடுகு - தாளிக்க
உப்பு - தேவைக்கேற்ப
காய்கறிகள் - முருங்கைக்காய் அல்லது உலர்ந்த மாங்காய் ( தஞ்சாவூர் வட்டார வழக்கில் கசுமாங்காய் என்று அழைக்கப்படும்)


செய்முறை


புளியைத் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து இரண்டு கப் அளவுக்கு புளிக்கரைசல் தயாரிக்கவும்.


துவரம்பருப்பு, மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம் பருப்பு., கருவேப்பிலை, பெருங்காயம் எல்லாவற்றையும் ஒன்றாக வறுத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.


புளிக்கரைசலில் உப்பு, காய்கறியைச் சேர்த்து அடுப்பிலேற்றி கொதிக்க விடவும்.


காய் வெந்தபின் விழுதையும் சேர்த்து ஐந்து நிமிடங்கள் அல்லது கரைசல் கெட்டியாகத் தொடங்கும் வரை கொதிக்க விடவும். கடுகு தாளித்து இறக்கி வைக்கவும்.

சாதத்துடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கு. இதற்கு தேங்காய் போட்டு செய்யும் புடலங்காய் பொரியல் அல்லது எல்லா தயிர் பச்சடியும் நல்ல பக்க உணவாக இருக்கும்.


இந்தக் குழம்பு அஜீரணத்துக்கு மிகவும் நல்லது.


MILAGU KUZHAMBU

MILAGU KUZHAMBU


Ingredients:

thur dal - 2 teaspoon
Red chillies - 1-2
pepper - 1 teaspoon
curry leaves  - 1/2 cup
urad dal - 1/2 teaspoon
tamarind - small lemon size
asafoetida - little
oil - to fry
mustard seeds - for seasoning
salt to taste
vegetables : drumstick or dried mango ( called as kas mangai in thanjavur )

METHOD

soak tamarind in water and prepare puree about two glasses of measurement.
fry thurdal, redchillies, pepper, uraddal, curry leaves, hing and grind to fine paste.
add salt, vegetables to tamarind water and let it boil till the vegetables are done.
Add the paste and let it boil for 5-6 minutes or till it becomes like gravy.


season it with mustard seeds.
mix it with rice and ghee.

snake gourd or any sookha baji with coconut or any type of raitha is good combination.

This is very good for digestion.

பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை


தேவையான பொருட்கள்

அரிசி - 1 கப்

பொடித்த வெல்லம் - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

ஏலக்காய் பொடி - சிறிது

செய்முறை

துருவிய தேங்காயைப் பிழிந்து பால் எடுக்கவும்.

அரிசியை அரைமணி ஊறவைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு ஆக்கிக் கொள்ளவும்.

ஒரு நான் ஸ்டிக் வாணலியில் இட்டு அடுப்பிலேற்றி சூடாக்கி விடாமல் கிளறவும். மாவு கெட்டிப்படுகையில் இறக்கி விட்டு ஆறவிடவும். நன்றாக ஆறுமுன் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பொடித்த வெல்லைத்தை இரண்டு கப் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்க வைத்து பாகு காய்ச்சவும் ( 5 நிமிடங்கள்0

ஒவ்வொரு உருண்டையாக அதில் போட்டு இன்னும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கடைசியாக பிழிந்து வைத்த தேங்காய்ப் பாலை அதில் விட்டு இறக்கிவிடவும். இறக்கிய பின் ஏலப்பொடியைச் சேர்த்து கலக்கவும்.

சிறிது நேரம் ஊறியபின் பால் கொழுக்கட்டை மிக சுவையாக இருக்கும்.

Paal kozhukkattai

PAAL KOZHUKKATTAI


Ingredients

1. Rice - 1 cup

2. Jaggery - 1 cup

3. Coconut grated - 1 cup

4. Elaichi powder - 1 tsp

Method

Grind coconut and extract milk.

Soak rice in water for half an hour. Grind it into fine paste.

Add water to the rice paste and make it to dosa batter consistency.

Place a non stick kadai on the stove add the batter, stir continuously to make thick dough. Remove from fire.

Make small balls out of it. Keep aside.

Mix powdered Jaggery in two cups of water. Heat it. Once it dissolves, strain to remove dirt.

Again boil and make it into syrup. (apprx 5 mts).

Add the balls one by one and cook for five more mts.

Finally add the coconut milk to the syrup and switch off the fire.

Add elaichi powder to it.

Tuesday, January 18, 2011

Mor Rasam

Mor rasam
( simple receipe to have during feverish spell )
(This is good especially during evening / night dinner )

ingredients
buttermilk ( slightly sour ) - 1 1/2 cups
turmeric powder - a pinch
omam - 3/4 teaspoon
mustard seeds - 1/2 tea spoon
green chilly - 1
curry leaves
salt
oil - little
rice flour - 1/4 tsp

Method

mix rice flour, salt, turmeric powder with butter milk.

Heat a tawa with little oil. Add mustard, omam, cut green chilly,
curry leaves and season. Add buttermilk mix.
When it starts to boil remove from the stove.
Do not over boil. Mix it with plain rice.

Rice pappad is a good combination as side dish.

மோர் ரசம்

( மாலை மற்றுக் இரவு உணவுக்கு ஏற்றது. காய்ச்சலினால் வாய்க்கசப்பு இருக்கும்போது சாப்பிட உகந்தது)

தேவையான பொருட்கள்

மோர் ( லேசான புளிப்புடன் ) 1 1/2 கப்
மஞ்சள் பொடி   -  ஒரு சிட்டிகை
ஓமம்  - 3/4 தேக்கரண்டி
கடுகு   - 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய்   - 1
அரிசி மாவு   - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு ஆர்க்கு
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசிமாவு, உப்பு, மஞ்சள் பொடி இவற்றை மோரோடு சேர்த்து கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, ஓமம், மிளகாய், க்ருவேப்பிலை இவற்றைப் போட்டு தாளிக்கவும். மோரை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கலக்கவும். பொங்கி வரும்போது இறக்கி விடவும். ( அதிகமாக பொங்க விட வேண்டாம்)

நன்றாக மசித்த சாதத்துடன் கரைத்து கொடுத்தால் வாய்கசப்பு இருப்பவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

வெறும் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள அரிசி அப்பளம் உபயோகிக்கலாம். மழைக்கால இரவு நேரங்களில் வயிற்றுக்கு பாதிப்பு தராத ஒரு உணவு.

Saturday, January 15, 2011

புதுசு புதுசா ஊறுகாய்



மஞ்சள் ஊறுகாய்

பசுமஞ்சள் - 100 கிராம் ( இப்போது பொங்கல் சமயத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் )
மிளகாய் வற்றல் - 10
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
க்டுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு

செய்முறை
பசுமஞ்சளைக் கழுவி தோல் சீவி காரட் துருவுவது போலத் துருவி வைத்துக் கொள்ளவும்.

கட்டிப் பெருங்காயத்தை கொஞ்சமாக எண்ணெய் விட்டுப் பொரித்து வைத்துக் கொள்ளவும்.

மிளகாய் வற்றலையும் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் ( வாசனை வரும் வரை ) வெந்தயம் பொரியும் வரை வறுத்துக் கொள்ளவும். பின் பெருங்காயத்துடன் சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

வாணலியில் எண்ணையை விட்டு கடுகு தாளித்து துருவிய மஞ்சளைப் போட்டு 5 நிமிடம் வதக்கவும். பிறகு உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

ஆறிய பிறகு ஊறுகாய் ஜாடியில் பத்திரப் படுத்தவும.

( இது கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

எந்த ஊறுகாய்க்குமே ஸ்பூனை உபயோகப் படுத்தும்போது ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் )